Saturday, November 10, 2007

கண்ணீர்அஞ்சலி


கண்ணீர்அஞ்சலி

தமிழீழம் பெற்றெடுத்த
தமிழ்செல்வனெனும்
பிள்ளையொன்று-இன்று
நம்மை விட்டுசென்றதம்மா!
எதற்காக சென்றாயோ....!
தமிழீழம் பெற்றுத்தர
தன்னுயிரை கொடுத்து-இன்று
தமிழர்கள்
தமிழீழம்
மலர வேண்டுமென
ஜவருடன் எங்கு சென்றாய்...!
நீ சென்ற
வேதனையின் பிரிவால்
தரணியில்புரல்கிறது
தமிழர்களும்
தமிழீழமும்....!
உன் புன்னகை பேச்சை கண்டு
உலகமே வியந்து நின்றது-ஆனால்
உன்னுடைய படைத்திறனை கண்டு
உயிருள்ள ஜீவனும்
உயிரற்ற யடங்களும்
ஒருகணம் திகைத்து நின்றது
அன்றைய பொழுது-ஆனால்
இன்றைய பொழுதோ
உன் பிரிவை கேட்டு
ஒவ்வொரு கணமும்
உன் நினைவில்
உன் பிரிவில்
கண்ணீர் துளிகளை
சிந்திய வண்ணம்
கலங்கி நிற்கிறது..!
கலங்கியது தமிழர்கள் உள்ளம்
கலங்கப் போகிறது சிங்கள கொட்டம்.......?

0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro